Posts

Showing posts from June 8, 2020

காலனிய ஆட்சியினர் தங்களின் சுயதேவைக்காக இந்தியாவில் உள்ள சாதிகள் குறித்தத் தகவல்களை திரட்டினர். சாதி குறித்த ஆய்வுகளுக்கு, காலனிய ஆட்சியினர் தொகுத்த இனவரைவியல் நூல்களே இன்றைய ஆய்வாளர்களுக்கு வேத நூல் போல் இருந்து வருகிறது. வேத நூலை கேள்விக்குட்படுத்த மறுப்பது போலவே இனவரைவியல் நூல் மீதும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புவதில்லை.

Image
பேராசிரியர். கோ.ரகுபதி காலனிய ஆட்சியினர் தங்களின் சுயதேவைக்காக இந்தியாவில் உள்ள சாதிகள் குறித்தத் தகவல்களை திரட்டினர்.  சாதி குறித்த ஆய்வுகளுக்கு, காலனிய ஆட்சியினர் தொகுத்த இனவரைவியல் நூல்களே இன்றைய ஆய்வாளர்களுக்கு வேத நூல் போல் இருந்து வருகிறது.  வேத நூலை கேள்விக்குட்படுத்த மறுப்பது போலவே இனவரைவியல் நூல் மீதும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புவதில்லை. தென்னிந்தியாவில் உள்ள சாதிகளின் வரலாற்றினை எழுதுவதற்கு எட்கர் தர்ட்ஸனின் தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற நூலே வேதநூல்.  இந்த நூலில் பிராமண ஆணுக்கும் பிராமணர் அல்லாத பெண்ணுக்கும் பிறந்தவர்கள் என்றே பெரும்பாலான சாதிகளின் தோற்றம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.  நாவிதர், நாசுவர், பண்டிதர், பண்டுவர், மருத்துவர், பரியாரி, குடிமகன் என பல பெயர்கள் இருந்த போதிலும் அவர்களை அம்பஷ்ட்டர் என்ற தலைப்பின் கீழ் எட்கர் தர்ட்ஸன் அவர்களின் தோற்றக் கதையை இவ்வாறு பதிவு செய்துள்ளார்: ”பிராமணருக்கும் வைசிய பெண்ணுக்கும் பிறந்தவர்கள் அம்பஷ்ட்டர்”.  1909ல் எட்கர் தர்ட்ஸன் என்ன எழுதினாரோ அதே விவரணைதான் ஒரு நூற்றாண்டை கடந்த பின்னரும் தொடர்...

மருத்துவர் சமூகம்உலகெங்கும் உள்ள மருத்துவர் சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக ..மருத்துவர் சமூக வரலாறு

Image
மருத்துவர் சமூகம் உலகெங்கும் உள்ள மருத்துவர் சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக .. மருத்துவர் சமூக வரலாறு சலூன் க டை என்றாலே சிறுவர்களாக இருந்த பொழுது அரைகுறை ஆடைகளுடன் பெண்களின் அங்கங்கள் நமக்கு அறிமுகமான இடம் என்பதாகத்தான் நாம் நினைக்கிறோம். சவரத்தொழிலாளிகள் என்பவர்கள் யார், ஏன் அவர்கள் அந்த தொழிலை செய்துவருகிறார்கள் ? அவர்களுக்கு அது குலத்தொழிலா ? என்கிற கேள்வியை நம்மில் கேட்டுக் கொண்டவர் குறைவே. எந்த ஒரு இனத்திலும் குலத்தொழிலாக இல்லாத பலத் தொழில்கள் இந்தியாவில் குலத்தொழில்களாகத் தொடர்வதில் சவரத் தொழிலும் ஒன்று. சவரத் தொழிலாளிகள் யார் ? அம்பட்டர், பரியாரி, பார்பர், நாவிதர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கபடும் மருத்துவர் என்னும் ஆதிமருத்துவர் சமூகம் எப்படி ஏற்பட்டது என்று பார்த்தால், பண்டைய இந்தியாவில் முடிகளை மழித்துக் கொள்ளும் பழக்கம் பெளத்தர்களுக்கும், சமணர்களுக்குமே உரிய வழக்கம், அவர்கள் தவிர்த்து பார்பனர்கள் தலை உச்சியைத் தவிர்த்து தலையை மழித்துக் கொள்ளும் வழக்கம் உடையவர்களாக இருந்தனர். உடலில் பூணூல் அணியாத காலங்களில் பார்பனர்கள் தங்களின் தனி அடையாளத்திற்காக உச்சிக் குடுமி வைத்து ...

காந்தி எனும் நாவிதர்( அல்லது )காந்தி எனும் முடிதிருத்துபவர்…

காந்தி எனும் நாவிதர்… (பாகம் 2 /2   வெ. ராமசாமி 8 years ago … அல்லது காந்தி எனும் முடிதிருத்துபவர்… “பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட,  1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின்   ஐந்தாம் அத்தியாயம்: பார்பர். இவ்வத்தியாயத்தின் முதல் பாகம் . கீழே இரண்டாம் பகுதி…. =-=-=-= … அவருடைய ஆசிரமங்களில், வெளியிலிருந்து வந்து, நாவிதர்கள் சவரம் செய்தல், முடிவெட்டுதல் என்கிற பேச்சே இல்லை… ஆசிரமவாசிகள், ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு அவர்களின் நாவித வேலைகளைச் செய்து கொண்டனர். காந்தி, ஆசிரம மாணவர்களை, எளிய சுயசார்புடைய வாழ்க்கை முறைகளுக்குப் பழக்கப் படுத்தப் படவேண்டுமென விரும்பினார். புதுப்பாணி உடைகளுக்கோ, காலவண்ணங்களுக்கேற்றபடியான நவநாகரீகங்களுக்கோ, அறுசுவை சொட்டும் உணவுகளுக்கோ, அவர் ஆசிரமத்தில் இடமில்லை. =-=-=-= ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை, ஆசிரம மாணவர்கள், குளிக்கச் செல்வதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர். காந்தி அவர்களை ஒருவர் பின் ஒருவராகக் கூப்பிட்டு, அவர்களுக்கு முடி வெட்டி விட்டார். அம்மாணவர்களுக்கு ...

சுதந்திர போராட்ட தியாகிகளில் மருத்துவர் சமுதாய போராளி தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாஸ் அவர்களும் இந்த படத்தில் உள்ளார் இந்திய சுதந்திர போராட்டத்தில் 29 முறைகள் சிறை சென்ற தியாகி ஆவார்

Image

மருத்துவ சமுதாயத்தின் சாதனை குடும்பம் மதுரை மோகன் மகள் நேத்ரா பசி பட்டினியால் வாடிய பல உயிர்களை தன் படிப்பிற்காக சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தை கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்புகளை இழந்து வீட்டிலேயே முடங்கிய நிலையில் பசி என்னும் கோரப்பிடியில் இருந்த பல குடும்பத்தின் பசியை போக்கிய நமது மருத்துவ சமுதாயத்தின் உலகமே போற்றும் மதுரை மோகன் அவர்களின் வீட்டிற்கு இன்று காலை 10.30 மணி அளவில் நேரில் சென்று தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கத்தின் சார்பாக மாநில பொதுச்செயலாளர் கம்பம் ராஜன் அவர்களின் தலைமையில் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் K.P.ராமதாஸ், தேனி மாவட்ட தலைவர் மனோகரன் அவர்களும் மோகன் அவர்கள் இல்லம் சென்று வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

Image
மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும்  மோகன் மகள்  நேத்ராவிற்க்கு  ஏழை  மக்களின் நல்லெண்ணத் தூதராக பதவி ஐ. நா. சபை அறிவிப்பு  வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் ! கடந்த மாதம் 31-ம் தேதி பிரதமர் மோடிஜி மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர், 'கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் குறித்து உருக்கமாக பேசினார். அந்த உரையில், கொரோனா ஊடங்கு காலத்தில் ஏழைகளுக்கு உதவியவர்களையும் குறிப்பிட்டு பேசினார். இதுகுறித்து பேசிய அவர், 'கொரோனா ஊரடங்கு காலத்தில் எண்ணற்ற மக்கள் தங்களுடைய சொந்த சேமிப்பைக் கொண்டு ஏராளமான மக்களுக்கு உதவியுள்ளனர். அதில், மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மோகன் என்பவர் அவரது மகளின் படிப்புச் செலவுக்காக வாழ்நாள் முழுதும் உழைத்து சேர்த்துவைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தைக் கொண்டு ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த ஏழைகளுக்கு செலவிட்டு உதவி செய்துள்ளார்.அவருக்கு என்னுடைய பாராட்டுகள் என்றார். இதனையடுத்து மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மதுரை மோகனுக்கு பாராட்டுகள் குவிந்தன. அவரது மகள் ...