Posts

Showing posts from April 18, 2020

🌷🌷*சாதி வெறியர்களுக்கான ஒரு சவுக்கடி கவிதை, சுகிர்தராணி அவர்களிடமிருந்து!*🌸

🍀 *தற்கொலை செய்து கொள்!*  நாங்கள் *சமையலராக* இருக்கிறோம். நாங்கள் சமைத்த உணவுஉனக்கு வேண்டாமெனில்… நாங்கள் *மருத்துவராக*  இருக்கிறோமே உனக்கு நீயே வைத்தியம் செய்துகொள்... *செவிலியராக* இருக்கிறோம். உன் பிரசவத்தைநீயே பார்த்துக் கொள்... *பிணத்தை எரிப்பவராக* இருக்கிறோம் உன் பிணத்தைநீயே எரித்துக் கொள்... *பொறியாளராக* இருக்கிறோம். உன் கட்டடத்தை நீயே கட்டிக் கொள்... *வழக்கறிஞராக* இருக்கிறோம். உனக்கு நீயே வாதாடிக் கொள்... *முடி வெட்டுபவராக* இருக்கிறோம். உன் மயிரை நீயே வெட்டிக் கொள்... *ஆசிரியராக* இருக்கிறோம் உன் பிள்ளைகளுக்கு நீயே சொல்லிக்கொடு... *ஓட்டுநராக* இருக்கிறோம். உன் போக்குவரத்தைநீயே பார்த்துக் கொள்... *கூலிகளாய்* இருக்கிறோம். உன் சுமைகளை நீயே தூக்கிக் கொள்..  *மலம் அள்ளுபவராக* இருக்கிறோம். உன் மலத்தை நீயே அள்ளிக் கொள்... *சாக்கடை வாருபவராக* இருக்கிறோம். உன் சாக்கடையை நீயே வாரிக் கொள்... *கலப்புமணம் புரிந்தவராக* இருக்கிறோம். உன்னையே நீ புணர்ந்துகொள்... நாங்கள் *அரசியலமைப்புச் சட்டத்தை* எழுதியவராக இருக்கிறோம்... *இதுவும் உனக்கு வேண்டாமெனில், தயவுசெய்து தற்கொலை செய்துகொள்.*...

சர்வதேச சமூகத்திற்கு எதிரியாக மாறும் சலூன் கடைகள்..? அமெரிக்காவில் 50% பாதிப்புக்கு காரணம் சலூன்கள்

Image
சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பேரழிவுகளை ஏற்படுத்திவருகிறது. உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவில் தான் கோர தாண்டவம் ஆடியுள்ளது. உலகளவில் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் சுமார் 7 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் சமூக தொற்றாக பரவிவிட்டதால் அங்கு பாதிப்பு கடுமையாக இருக்கிறது. இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கும் பேரிழப்பு. இந்தியாவில் 14 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.450 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா அபாயகரமான தொற்று நோய் என்பதால், அதிலிருந்து தற்காத்துக்கொள்ள தனிமைப்படுதலும் சமூக விலகலுமே முக்கியம் என்பதால், பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்திவிட்டு கொரோனாவை தடுக்க போராடிவருகின்றன. கொரோனா தொற்றுள்ளவரிடமிருந்து தும்மல், இருமல் மூலமான வெளிவரும் எச்சில் மூலமாகவோ, கொரோனா தொற்றுள்ளவர்கள் தொட்ட பொருட்களை தொட்டு, அப்படியே மூக்கு, வாய் ஆகிய உறுப்புகளில் வைப்பதன் மூலமாகவோ என அந்த தொற்றுள்ளவரிட...