🌷🌷*சாதி வெறியர்களுக்கான ஒரு சவுக்கடி கவிதை, சுகிர்தராணி அவர்களிடமிருந்து!*🌸
🍀 *தற்கொலை செய்து கொள்!* நாங்கள் *சமையலராக* இருக்கிறோம். நாங்கள் சமைத்த உணவுஉனக்கு வேண்டாமெனில்… நாங்கள் *மருத்துவராக* இருக்கிறோமே உனக்கு நீயே வைத்தியம் செய்துகொள்... *செவிலியராக* இருக்கிறோம். உன் பிரசவத்தைநீயே பார்த்துக் கொள்... *பிணத்தை எரிப்பவராக* இருக்கிறோம் உன் பிணத்தைநீயே எரித்துக் கொள்... *பொறியாளராக* இருக்கிறோம். உன் கட்டடத்தை நீயே கட்டிக் கொள்... *வழக்கறிஞராக* இருக்கிறோம். உனக்கு நீயே வாதாடிக் கொள்... *முடி வெட்டுபவராக* இருக்கிறோம். உன் மயிரை நீயே வெட்டிக் கொள்... *ஆசிரியராக* இருக்கிறோம் உன் பிள்ளைகளுக்கு நீயே சொல்லிக்கொடு... *ஓட்டுநராக* இருக்கிறோம். உன் போக்குவரத்தைநீயே பார்த்துக் கொள்... *கூலிகளாய்* இருக்கிறோம். உன் சுமைகளை நீயே தூக்கிக் கொள்.. *மலம் அள்ளுபவராக* இருக்கிறோம். உன் மலத்தை நீயே அள்ளிக் கொள்... *சாக்கடை வாருபவராக* இருக்கிறோம். உன் சாக்கடையை நீயே வாரிக் கொள்... *கலப்புமணம் புரிந்தவராக* இருக்கிறோம். உன்னையே நீ புணர்ந்துகொள்... நாங்கள் *அரசியலமைப்புச் சட்டத்தை* எழுதியவராக இருக்கிறோம்... *இதுவும் உனக்கு வேண்டாமெனில், தயவுசெய்து தற்கொலை செய்துகொள்.*...