தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம்

தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கத்தின் மாநில தலைமையின் சார்பாக மாநில பொதுச்செயலாளரின் அறிக்கை மத்திய மாநில அரசுகளின் வேண்டுகோளின் படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய அனைத்து சலூன் கடைகளையும் 22.03.20 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நமது கடைகளை அடைத்து விட்டு பாதுகாப்பாக வீட்டில் இருக்கும்படியும் நமது தொழில் செய்யும் அத்துனை மருத்துவ அன்பு உறவுகளும் நம்முடைய உடல் பாதுகாப்பு கருதியும் கொரானா வைரஸ் தாக்கத்தில் இருந்து நமது சமுதாய மக்களை காக்கின்ற விதத்தில் நமது உடல் நலம் கருதியும் வாடிக்கையாளரின் பாதுகாப்பு கருதியும் அனைவரும் கையுறை அணிந்தும் முக கவசம் அணிந்தும் கடைகளை சுத்தமாக வைத்திருந்து தொழில் செய்யும்படி மாநில சங்கத்தின் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கின்றோம் என்றும் எம் சமுதாய மக்களின் நலனில் மாநில சங்கம் மாநில தலைவர் நடேசன் மாநில பொதுச்செயலாளர் கம்பம் ராஜன் மாநில பொருளாளர் குமார்