""சென்னியவிடுதியிலிருந்து- சென்னை மாநகர் வரை"" சென்னியவிடுதி C.வைத்தியநாதன்
வணக்கம். உறவுகளே! இனமான காவலர், சென்னியவிடுதி தந்த மாணிக்கம், அண்ணன் திரு.திரு.C.வைத்தியநாதன் அவர்கள், ஆசிரியராக இருந்து பணி செய்த சமுதாயமடல் பத்திரிக்கையில் 2000ஆம் ஆண்டு நவம்பர் மாத இதழில் ""சென்னியவிடுதியிலிருந்து- சென்னை மாநகர் வரை!"" என்ற தலைப்பில் எழுதிய மடலை எழுத்து பதிவாக தருவதில் மகிழ்ச்சி கொள்கின்றேன். புதுக்கோட்டை M.A.பாண்டியன் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் ______________________________________ ""சென்னியவிடுதியிலிருந்து- சென்னை மாநகர் வரை!"" __________________C.வைத்தியநாதன்_____________ என் உயிரினும் மேலான, மகத்தான, மருத்துவர் இன தொழிலாளர்களே, அரசு அலுவலர்களே, ஆன்றோர்களே, சான்றோர்களே, இனமான இளம் சிங்கங்களே, பெற்றெடுத்த எம் தாய்மார்களே, அனைவருக்கும் என் வணக்கத்தை உங்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன். ஆசிரியருக்கு வயது 50 என்று ஒரு சிறு செய்தி அக்டோபர் மாத இதழில் வெளியிடப்பட்டது. அதை எத்தனை பேர்கள் கவனித்தார்களோ தெரியாது. அதை கவனித்த ஒரு சிலர் எனக்கு வா...