Posts

Showing posts from April 16, 2020

வேதாரணியம் தியாகி திரு.க.வைரப்பன் அவர்களின் வரலாறு.

Image
1930ஆம்ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி தமிழ் வருஷப் பிறப்பு நாள் அன்று, திருச்சியில் டாக்டர் டி எஸ் ராஜன் அவர்கள் இல்லத்தில் இருந்து, மரியாதைக்குரிய ராஜாஜி அவர்கள் தலைமையில், சுமார் 100 தொண்டர்கள் கிளம்பி 15 நாட்கள் நடை பயணம் செய்து வேதாரணியம் சென்றடைந்து, அங்கே அகஸ்தியம்பள்ளி என்னும் இடத்தில், உப்பு எடுத்து, மகாத்மா காந்தியடிகள் தண்டியில் செய்த உப்பு சத்தியாகிரகத்தை, இங்கே, தமிழ்நாட்டில் அரங்கேற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் மரியாதைக்குரிய ராஜாஜி அவர்கள், மரியாதைக்குரிய சந்தானம் அவர்கள், மரியாதைக்குரிய சர்தார் வேதரத்தினம் பிள்ளை அவர்கள், உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும், தொண்டர்களும் போலீஸ் அடக்குமுறைக்கு ஆளாகி அடிபட்டு, உதைபட்டு, சிறை சென்று, செய்த தியாகம் வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பெரிய பெரிய அரசியல் கட்சி தலைவர்கள், பெரிய மிராசுதாரர்கள், இவர்களெல்லாம் உப்பு சத்தியாகிரகப் போர் நடத்தினார்கள் என்றால், சாதாரண பொதுமக்களும் நேரடியாக போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், தங்களுடைய சக்திக்கு உட்பட்டு ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அவ...

சுளுந்தீ’. ‘பண்டிதர்’ நிலையிலிருந்து ‘முண்டிதர்’ நிலைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிய இந்த அரிய ‘ஆவண நாவல்’

Image
சுளுந்தீ’. ‘பண்டிதர்’ நிலையிலிருந்து ‘முண்டிதர்’ நிலைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிய இந்த அரிய ‘ஆவண நாவல்’ தமிழுக்குக் கொடை. தமிழில் அம்+பட்டர் என்பதே ‘அம்பட்டர்’ ஆனது என ஒரு விளக்கம் உண்டு. உயர் சாதியினருக்கு மருத்துவம் பார்க்கையில் தீட்டினைத் தவிர்க்கும் பொருட்டு ‘அழகிய பட்டுத் துணியினை அவர்கள் கைமேல் அணிவித்து நாடி பார்த்ததால் இப்பெயர் வந்தது என்பர். ‘அம் பட்டு’ என்றால் அழகிய பட்டு. ஆனால் இவ்விளக்கம் பொருத்தமானதாகத் தோன்றவில்லை. இரணசிகிச்சை மற்றும் பிரசவத்தை எப்படி அணுகியிருப்பார்கள் என்கிற கேள்வி பிறக்கிறது. இன்று இழிசொல்லாக மாறியுள்ள ’அம்பட்டர்’ என்ற சொல்லின் உண்மைப் பொருளே வேறு. அது ‘அம்பா’ (பக்கம்), ஸ்தா (இருப்பவர்) ஆகிய இரு வடமொழி வேர்ச்சொற்கள் இணைந்து தன்னிடம் சவரம் செய்து கொள்பவர் அருகிலோ, மருத்துவர் பார்த்துக் கொள்பவர் அருகிலோ இருப்பவர் என்ற பொருளைத் தருவதாகும். மலையாள சவரத் தொழிலாளியான ‘காவுதியன்’ அருகிலிருப்பவர் எனும் பொருளில் ‘அடுத்தோன்’ என்று அழைக்கப்படுவது சான்று. வேதியர் தொழிலை உயர்வான தொழிலாக நிலைநிறுத்த இதரத் தொழில்களைக் கீழ்மைப்படுத்த வேண்டிய அவசியம...