மருத்துவரே மருத்துவரே கொஞ்சம் நில்லுங்கள் திரு முகவை முத்துக்கருப்பன் அவர்களின் 1997 ஆம் ஆண்டு சமுதாய மடல் பத்திரிக்கைக்கு எழுதிய கவிதை மடல்
மருத்துவரே மருத்துவரே கொஞ்சம் நில்லுங்க -உங்க மனக்குறைதான் என்னனு இப்போ சொல்லுங்க கருத்துக்களை கேட்டிடுவோம் நாங்கதானுங்க -உங்க கவலைகளை விரட்டிடுவோம் உறுதிதானுங்க கூலிக்குத்தான் பிழைக்கிறாங்க நம்ம ஆளுங்க -சும்மா குடித்துகுடித்து அளிக்கிறாங்க நிறையபேருங்க சாதியைத்தான் பேசுறாங்கமற்ற ஆளுங்க -ஆனால் சங்கடத்தில் வாடுவதோ நம்ம குமருங்க அடிமைசெய்யும் குடியைநம்பி வாழலாகுமா -சும்மா அவதிப்பட்டு குடலறுக்க விதி வசமா வாலிபத்தில்தேடி வைத்துவாழ பழகணும் -வரும் வயோகத்தில் அதைசுவைத்து வாழ்ந்துமறையனும் போதைபோதை என்போருக்கு ஒன்றுசொல்வேங்க -கொஞ்சம் பொறுமையுடன் கேட்கவேணும் நீங்கதானுங்க கோடிபணம் தேடித்தரும் கோலார்தங்கமா -அது கொன்றுஉன்னை தூக்கிவிடும் சாவுசின்னமா காந்தித்தாத்தா போலநீங்க மதுவைமறக்கணும் -தினம் காலைமாலை வேலைசெய்து பணத்தைசேர்க்கணும் மனைவிமக்கள் தான்மகிழ வாழ்ந்துகாட்டணும் -தெய்வத்திடம் மண்டியிட்டு தண்டம் செய்து மன்னிப்பு கோரணும். கவிதை ஆக்கம் திரு முகவை ம...