*"பிராமணன் பூசாரியாக இருந்தா கோயிலுக்கு நஞ்ச நிலமும், பசுவும் காணிக்கையாக கேட்பான். ஆசாரி பூசாரியாக இருந்தால் அருவா சூலம் அடிச்சு வைக்கச் சொல்வான். இடையன் பூசாரியா இருந்தா கிடாவெட்டச் சொல்வான், குயவன் பூசாரியா இருந்தா தீச்சட்டி எடுக்கச் சொல்வான், இலை மண்ணுல சாமி சிலை செஞ்சுவைக்கச் சொல்வான். பூபண்டாரம் பூசாரியா இருந்தா சாமிக்கு மாலைகட்டி போடச்சொல்வான். சாமிக்கு வேண்டுதல் எல்லாம் பூசாரிக்கு பயன்தரும் விசயமாத்தான்

நூல்: சுளுந்தீ ஆசிரியர்: இரா. முதுநாகு. பதிப்பு: ஆதி பதிப்பகம் இந்நாவலின் ஆசிரியர் ஒரு பத்திரிகையாளர். ஒளிப்படக் கூடம் நடத்திவருகிறார். சொந்த ஊர் ஆண்டிபட்டிக்கு அருகிலுள்ள குரும்பப்பட்டி. இந்நாவல் த.மு.எ.க.ச வின் பரிசைப் பெற்றுள்ளது. ஆசிரியருக்கு இது முதல் நாவலாகும். கதையின் களமாக கன்னிவாடி அமைந்துள்ளது. இது ஜமீன் காலத்தில் நடந்த கதையாக உள்ளது. கதையை இரண்டு பாகமாக பிரித்துக்கொள்ளலாம். ஒன்று, கன்னிவாடியின் அரண்மனை நாவிதனான ராமன் (ராமபண்டுவன் ), பன்றிமலை சித்தர், ஜமீன்தார் ஆகியோரை சுற்றி நடக்கக்கூடிய கதை. பன்றிமலை சித்தர் பல மொழிகளை அறிந்த அறிஞர். அதுமட்டுமல்லாமல் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஏற்படும் நோயை தீர்க்கும் வழிவகை அறிந்தவர். அவரின் சீடனாக தன்னை அர்பணித்துக்கொள்ளும் ராமன். ஒரே அடியில் (கையால்தான்) புலியை வீழ்த்தும் வல்லமை படைத்தவன். ஜமீன்தாரிடம் விசுவாசம் கொண்டவன், சித்தரிடம் பக்தியுடையவன். நீண்ட நாள் குழந்தையில்லாமல் சித்தரின் அருளால் ஒரு ஆண்குழந்தை பெற்றவன். அவன் பெயராக தன்னுடைய குலதெய்வத்தின் பெயரான செங்குளத்து மாடன் என்ற பெ...