🌷🌷*சாதி வெறியர்களுக்கான ஒரு சவுக்கடி கவிதை, சுகிர்தராணி அவர்களிடமிருந்து!*🌸



🍀 *தற்கொலை செய்து கொள்!* 

நாங்கள் *சமையலராக* இருக்கிறோம். நாங்கள் சமைத்த உணவுஉனக்கு வேண்டாமெனில்…

நாங்கள் *மருத்துவராக*  இருக்கிறோமே உனக்கு நீயே வைத்தியம் செய்துகொள்...

*செவிலியராக* இருக்கிறோம். உன் பிரசவத்தைநீயே பார்த்துக் கொள்...

*பிணத்தை எரிப்பவராக* இருக்கிறோம்
உன் பிணத்தைநீயே எரித்துக் கொள்...

*பொறியாளராக* இருக்கிறோம். உன் கட்டடத்தை நீயே கட்டிக் கொள்...

*வழக்கறிஞராக* இருக்கிறோம். உனக்கு நீயே வாதாடிக் கொள்...

*முடி வெட்டுபவராக* இருக்கிறோம். உன் மயிரை நீயே வெட்டிக் கொள்...

*ஆசிரியராக* இருக்கிறோம் உன் பிள்ளைகளுக்கு நீயே சொல்லிக்கொடு...

*ஓட்டுநராக* இருக்கிறோம். உன் போக்குவரத்தைநீயே பார்த்துக் கொள்...

*கூலிகளாய்* இருக்கிறோம். உன் சுமைகளை நீயே தூக்கிக் கொள்.. 

*மலம் அள்ளுபவராக* இருக்கிறோம். உன் மலத்தை நீயே அள்ளிக் கொள்...

*சாக்கடை வாருபவராக* இருக்கிறோம். உன் சாக்கடையை நீயே வாரிக் கொள்...

*கலப்புமணம் புரிந்தவராக* இருக்கிறோம். உன்னையே நீ புணர்ந்துகொள்...

நாங்கள் *அரசியலமைப்புச் சட்டத்தை* எழுதியவராக இருக்கிறோம்...

*இதுவும் உனக்கு வேண்டாமெனில், தயவுசெய்து தற்கொலை செய்துகொள்.*   🏹🏹

Comments

  1. மிக்க நன்றி உறவுகளே ....
    திருவைக்குமரன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அம் -பட்டர் விளக்கம்

""சென்னியவிடுதியிலிருந்து- சென்னை மாநகர் வரை"" சென்னியவிடுதி C.வைத்தியநாதன்

வேதை க வைரப்பன்