🌷🌷*சாதி வெறியர்களுக்கான ஒரு சவுக்கடி கவிதை, சுகிர்தராணி அவர்களிடமிருந்து!*🌸
🍀 *தற்கொலை செய்து கொள்!*
நாங்கள் *சமையலராக* இருக்கிறோம். நாங்கள் சமைத்த உணவுஉனக்கு வேண்டாமெனில்…
நாங்கள் *மருத்துவராக* இருக்கிறோமே உனக்கு நீயே வைத்தியம் செய்துகொள்...
*செவிலியராக* இருக்கிறோம். உன் பிரசவத்தைநீயே பார்த்துக் கொள்...
*பிணத்தை எரிப்பவராக* இருக்கிறோம்
உன் பிணத்தைநீயே எரித்துக் கொள்...
*பொறியாளராக* இருக்கிறோம். உன் கட்டடத்தை நீயே கட்டிக் கொள்...
*வழக்கறிஞராக* இருக்கிறோம். உனக்கு நீயே வாதாடிக் கொள்...
*முடி வெட்டுபவராக* இருக்கிறோம். உன் மயிரை நீயே வெட்டிக் கொள்...
*ஆசிரியராக* இருக்கிறோம் உன் பிள்ளைகளுக்கு நீயே சொல்லிக்கொடு...
*ஓட்டுநராக* இருக்கிறோம். உன் போக்குவரத்தைநீயே பார்த்துக் கொள்...
*கூலிகளாய்* இருக்கிறோம். உன் சுமைகளை நீயே தூக்கிக் கொள்..
*மலம் அள்ளுபவராக* இருக்கிறோம். உன் மலத்தை நீயே அள்ளிக் கொள்...
*சாக்கடை வாருபவராக* இருக்கிறோம். உன் சாக்கடையை நீயே வாரிக் கொள்...
*கலப்புமணம் புரிந்தவராக* இருக்கிறோம். உன்னையே நீ புணர்ந்துகொள்...
நாங்கள் *அரசியலமைப்புச் சட்டத்தை* எழுதியவராக இருக்கிறோம்...
*இதுவும் உனக்கு வேண்டாமெனில், தயவுசெய்து தற்கொலை செய்துகொள்.* 🏹🏹
மிக்க நன்றி உறவுகளே ....
ReplyDeleteதிருவைக்குமரன்