அறுவை சிகிச்சை மருத்துவர்
இன்றைய இந்தியா பண்டைய கால பாரதமாக இருந்த போது உலக நாடுகளுக்கு பண்பாட்டு கலாச்சாரம் மற்றும் கலை மற்றும் ஆன்மீக சிந்தனைகள் ,மருத்துவம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கியதன் சான்று பல தெரிந்து இருக்கலாம் ஆனால் உலகில் மருத்துவம் சார்ந்த துறையில் முன்னோடியாக விளங்கிய நம்மவர்கள் பற்றி தெரிந்து கொள்ள நாம் தவறிவிட்டோம்!!1,தத்துவம்-இறை நம்பிக்கை அல்லது ஆத்ம ஞானம் என்று பொருள் படும் ஆன்மா கண்களுக்கு புலப்படாத சூட்சும உடலுக்காக வாழும் கலை நயம் இல்லற வாழ்வியல் ஒழுக்கம் சார்ந்தவை...2,மருத்துவம்-மறு+தத்துவம் இது இந்த ஆன்மாவை சுமக்கும் சரீர உடலுக்கான சிகிச்சை முறைகள் ஆகும்...சித்தர்கள் கண்களுக்கு புலப்படாமல் செய்த அற்புதங்கள் பல ஆனால் ஒரு மருத்துவராக அந்தக் காலகட்டத்தில் வைத்தியத்தில் பல அருமையான சாதனை படைத்த உலகின் முதல் அறுவை சிகிச்சையாளர் சுஷ்ருதா் என்ற சுஷ்ருதா
2800 ஆண்டுகளுக்கு முன். அறுவை சிகிச்சை
செய்த இந்தியர்.
இந்திய மருத்துவ துறையின் தந்தை என்று
அழைக்கப்படுபவரும் உலகில் முதன் முதலில்
ப்ளாஸ்டிக் ஸர்ஜரீ செய்தவருமான ஒப்பாரும்,
மிக்காரும் இல்லாத தலைசிறந்த மருத்துவர்
சுஷ்ருதா.
இவர் ஹரித்வாரில் பிறந்து காசியில் கல்வி
கற்றவர். முக்காலமும் உணர்ந்த ஞாநி,
விஞ்ஞானி, மருத்துவர்.
உலகின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர்.
இவர். 300 அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார்.
அனைத்தும் வெற்றிகரமாக.
சுஷ்ருதா தனது சுஷ்ருத சம்ஹிதாவில்
அறுவை சிகிச்சையை 8 விதமாக பிரித்து
உள்ளார். அவை.
1.செத்யா - துண்டித்தல்
2.லேக்யா- பிரித்தல்
3.வேதியா- போதைப்பொருளை உடலில்
இருந்து நீக்கல்
4.இஷ்யா- நோயின் மூலக்காரணத்தைக்
கண்டறிய ரத்தக்குழாய்களை ஆராய்தல்
5.அபர்வ கிரியா- தீமை விளைவிக்கும்
பொருட்களின் உற்பத்தியை உடலிலிருந்து
அழித்தல்
6.விஸ்ராதேவ்யா- உடலிலிருந்து தண்ணீரை
நீக்கல்
7.சிவ்யா- தைத்தல்
8.எந்திர கிரியா- துளைகள் போட்டு அறுவை
சிகிச்சை செய்வது.
மிகவும் வளர்ச்சி அடைந்த அறுவை சிகிச்சை
முறை பற்றியும் சுஷ்ருத சம்ஹிதாவில் அவர்
குறிப்பிட்டு உள்ளார்.
கண் அறுவை சிகிச்சை மற்றும் மூக்கு, காது
போன்ற உருப்புகளை புனரமைப்பு
செய்வதற்கான இந்த அறுவை சிகிச்சை
நடத்தப்பட்டு உள்ளது மேலும் தமது நூலில்
120 அறுவை சிகிச்சை கருவிகளை பற்றி இவர்
குறிப்பிட்டு உள்ளார்.
2800 வருடங்களுக்கு முன் நமது நாட்டில்
பிறந்த இந்த ஞானியின் பேர் சொல்ல இருக்கும்
ஒரே ஒரு சின்னம். எனக்கு தெரிந்தவரையில்.
இவர் பிறப்பிடமாகிய ஹரித்வார்ரில் உள்ள
பதஞ்சலி யோக பீடத்தில் இருக்கும் இவர் திரு
உருவ சிலை.
Comments
Post a Comment