கொரானா வைரஸ் நிவாரண உதவி வழங்கிய சலூன் கடைக்காரர் மோகன் மருத்துவர்

*மருத்துவ சமுதாய  உறவு *மோகன் சாதனை

அவர் என்ன செய்துவிட்டார் என்றால் ஒன்றுமில்லை, தன் சேமிப்பு தன் மகளின் படிப்புகாக சேர்த்த 5 லட்சம் ரூபாய் என எல்லாவற்றையும் கொரோனா காலத்தில் மக்களின் உணவுக்காக செலவழித்தார்

மதுரையில் அவர் வீடுதேடி சென்று உதவி பெற்றோர் ஏராளம், ஒரு கட்டத்தில் மனைவியின் நகையினை செலவழித்து உதவிகள் செய்தார்

அவர் மனைவியின் நகையினை வாங்கியோர் அவர்கள் போக்கில் இருக்க, இவர் அதை கொண்டு உணவிட்ட செய்தி நாட்டை உலுக்கியது

இதை நல்லோர் கவனித்தனர், மோடி அவர்கள்  இதை கவனித்து இன்று நாடறிய அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்

ஆம், தேசம் முழுக்க இன்று அந்த மோகனின் சேவைகளை உரக்க சொல்கிறார்கள் 

இப்பொழுது மோகன் எனும் சலூன்கடைகாரரின் தியாகம் கண்டு மெய்சிலிர்கின்றார்கள் 

மோடியின் அறிவிப்பினை கேட்டு  தேசம் மோகனை உற்று பார்க்கின்றது

 அவர் வழியில் பலர் உதவ தொடங்கி விட்டனர் இந்த மதுரை மோகன் அவர்கள் கொரோனா வரும் இப்படியெல்லாம் நடக்கும் என்றா எதிர் பார்த்தார்

 இல்லவே இல்லை முதலில் ஒவ்வொரு மருத்துவருக்கும் தன்னலமற்ற சேவை மனப்பான்மை உருவாக வேண்டும்

 நம் சமுதாயம் நம் மக்கள் என்கின்ற எண்ணம் உருவாக வேண்டும்

.ஆகவே இந்த இக்கட்டான நேரத்தில் பல குடும்பத்தின் பசியை போக்கிய   மோகன் அவர்கள் குடும்பத்தை இறைவன் காத்தருள்வாராக

Comments

Popular posts from this blog

அம் -பட்டர் விளக்கம்

""சென்னியவிடுதியிலிருந்து- சென்னை மாநகர் வரை"" சென்னியவிடுதி C.வைத்தியநாதன்

வேதை க வைரப்பன்