✍✍நாம் ஏன் மருத்துவர்?✍✍

✍🏻✍🏻 *நாம் ஏன் மருத்துவர்?*✍

நண்பன் ஒருவன் கேட்டான்
நான் என்ன சாதியென்றே!
நலமாய் நான் உரைத்தேன்
நாங்களெல்லாம் மருத்துவரே!

குழப்பமாய் அவன் கேட்டான்
குலம் மருத்துவரா என்று?
கூறினேன் நான் ஆம் என்றே!

மருத்துவரென்றால் மருத்துவம் பார்ப்பவரே!
மயிர் மழிக்கும் தொழில்செய்வோர்
அம்பட்டர் ஆவாரே?
ஆணவமாய் அவன் உரைத்தான்!

மண்ணாங்கட்டி அவன் மூளை
மதியின்றி கேட்கின்றான்
மதியுள்ள மருத்துவன் நான்
மாண்புடனே எடுத்துரைத்தேன்!

நோய்தீர்க்கும் *மருத்துவனாய்*
ஆய்ந்தறியும் *சோதிடனாய்*
அறிவு புகட்டும் *பண்டிதனாய்*
நாவிசைக்கும் *நாவிதனாய்*
பரிகாரம் செய்த *பரிகாரியாய்*
பல துறைகள் தெரிந்தாலும்
ஐந்தொழில்கள் ஆற்றியதால்
ஐம்பட்டர் ஆனோமே!
ஐந்தறிவு ஜீவன்களோ
அம்பட்டன் என்றழைப்பார்!

மருத்துவம் செய்யாதவன் மருத்துவரா? 
மறுபடியும் அவன் கேள்வி!

களவு தொழில் செய்வதில்லை
கள்ளர் என்கின்றார்!
மற வீரம் போர் இல்லை
மறவர் நான் என்கின்றார்!
அகம் காக்கும் தொழில் இல்லை
அகமுடையார் என்கின்றார்!
நாடாத குணமில்லை
நாடார் நான் என்கின்றார்!
கெட்டியாய் தொழில் இல்லை
வட்டிக்கு விடுவதில்லை
செட்டியார் என்கின்றார்!
தேவன் குணம் இல்லாதோர்
தேவர் நான் என்கின்றார்!
வேளாண்மை செய்யவில்லை
வெள்ளாளர் என்கின்றார்!
பள்ளமான பகுதிகளில்
பயிர் செய்யா இருப்போரும்
பள்ளர் நான் என்கின்றார்!
பறையதுவும் இசைப்பதில்லை
பறையர் என அழைப்பது ஏன்?
*பதில் கேள்வி நான் கேட்டேன்*
*பதில் இல்லை அவனிடமே!*
🤐🤐🤐🤐🤐🤐🤐🤐
*ஆதி மருத்துவரே*
*அழகு தொழில் கொண்டது ஏன்?*
*அறியாதோர் அறிந்திடுங்கள்*

ஆள்கின்ற அரசனுக்கு
அழகான முகத்தினிலே!
ஆரம்பித்த கட்டி ஒன்று
அவதியினை தந்ததுவே!
ஆலோசித்த மருத்துவரும்
அரைத்திட்டார் மூலிகையை!

தாடையிலே கட்டி வந்து
தடவ வேண்டும் மருந்து அங்கு!
தடையாக இருந்ததுவே
தாடியெனும் முடியதுவே!

தாடியதை அகற்றிடவே
தகதக என கத்தியையே!
தயாராக எடுத்து வந்து
தாடியையும் நீக்கினாரே!
தடவி விட்டார் மூலிகையை
தடமின்றி மறைந்தது  கட்டி!
தாங்கவில்லை மகிழ்ச்சி தானே
தாவி குதித்தார் அரசருமே!
தங்கம் வெள்ளி பணம் தனையே
தந்து விட்டார் மருத்துவனுக்கே!

அரசன் முகம் தனையே
அமைச்சர்களும் பார்த்தனரே!
அதிகாரிகளும் வியந்தனரே!
ஆவல் கொண்ட அவர்களுமே
ஆசை வார்த்தை கூறினாரே
ஆதி மருத்துவர் இணங்கினாரே
அழகு செய்ய முனைந்திட்டாரே!

ஆயிரம் வேரைக் கொன்றால்
அரை வைத்தியன் என்றுரைப்பர்!
அலைய வேண்டும் காட்டினிலே
அளித்திடவே மருத்துவத்தை!

அமர்ந்த இடத்தினிலே
அதிகமாய் பொருள் வரவே
ஐம்பட்டர் தொழில் குறைத்து
அழகு தொழில் கையெடுத்தார்!

அங்காங்கே சில இடத்தில்
ஆதிமருத்துவத்தை அவதியுடனேயே
அழியாமல் காத்து வந்தார்
ஆதி சிவன் வழி வந்த
ஆன்றோரே மருத்துவரும்!

ஆங்கிலேய அரசாங்கம்
அதிசயித்தார் திறமை கண்டு!
ஆந்தை போன்ற அவர் விழிகள்
அகலமாய் விரிந்தனவே!

ஆதி மருத்துவத்தை அழித்திடவே
அலோபதியை நுழைத்திடவே!
அதிரடியாய் திட்டம் தீட்டி
அழித்து விட்டார் மருத்துவத்தை
ஆப்பு வைத்தார் அனைவருக்கும்!
அறியாது மானிடரோ
அல்லல் பட்டு நிற்கின்றார்!

படிக்காமல் மருத்துவத்தை
பாரதத்தில் செய்தல் ஆகா!
பக்குவமாய் கொண்டு வந்தார்
பழி தீர்க்கும் சட்டத்தினை!

வழி தெரியா மருத்துவர்கள்
விழி பிதுங்கி நின்றனரே!
வயிற்று பிழைப்புக்காக 
வந்து விட்டார் அழகு தொழில்!
வரலாறு அறிவீரோ?

ரெகுபதி சரவணமுத்து 
சிங்கப்பூர்

Comments

Popular posts from this blog

அம் -பட்டர் விளக்கம்

""சென்னியவிடுதியிலிருந்து- சென்னை மாநகர் வரை"" சென்னியவிடுதி C.வைத்தியநாதன்

வேதை க வைரப்பன்