மாநில தலைவர் திரு M நடேசனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு. பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் MA பாண்டியன்

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம்
அனைத்து உறவுகளுக்கும் அன்பான வணக்கத்தை அன்புடன் தெரிவித்துக் கொள்வது புதுக்கோட்டை M.A.பாண்டியன் 
மாநில ஒருங்கிணைப்பாளர்.
வணக்கம். உறவுகளே!!
14/4/2020 நமது மகத்தான தலைவருக்கு 71வது பிறந்த நாள். வாழ்த்த வயதில்லை, வணங்குகின்றேன். அத்துடன் தமிழ் நெஞ்சங்களுக்கு சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள். 
1917ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நமது மருத்துவர் சமூக சங்கத்திற்கு வழுசேர்க்கும் விதமாக 10வது மாநில தலைவராக வீற்றியிருக்கும் நமது சமுதாய காவலர் அய்யா திரு.M.நடேசனார் அவர்களுக்கு 14/4/2020 அதாவது நாளை பிறந்த நாள். அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். எனது சார்பாகவும், எனது குடும்பத்தினர்கள் சார்பாகவும், நமது
  தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநில,மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை சங்கத்தின் சார்பாகவும், லட்சக்கணக்கான மருத்துவர் சமூக உறவுகள் சார்பாகவும் வாழ்த்தி வணங்குகின்றோம். தென்னிந்திய மருத்துவர் சங்கம் சித்த மருத்துவ மேதை பண்டிட்.S.S.ஆனந்தம் பண்டிதர் தலைமையில் சிறப்பாக செயல் பட்டுக் கொண்டுயிருந்தாலும், அன்றைய காலக்கட்டத்தில் சென்னையில் பல இன மக்கள் அதாவது, கேரளா, ஆந்திரா, கர்நாடகா சேர்ந்த மக்கள் நமது முடிதிருத்தும் தொழில் செய்து வந்த நேரத்தில் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டிய காரணத்தினால் 1954ஆம் ஆண்டு சவரதொழிலாளர் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. தனியாக சென்னையில் மட்டும் தொடங்கப்பட்ட சவரதொழிலாளர் சங்கம் கொஞ்சம் கொஞ்சம்மாக விரிவடைந்து வடமாவட்டம் முழுவதும் சவரதொழிலாளர் சங்கம் இயங்க ஆரம்பித்தது. தென்மாவட்டங்களில் மருத்துவர் சமூக நலச் சங்கம் மாவட்டம் தோறும் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்ப்பட்டு கொண்டுயிருந்தது. ஆரம்பத்தில் நமது சமுதாய காவலர் அய்யா திரு.நடேசனார் அவர்கள் சென்னை அண்ணாநகர் பகுதி தலைவராகவும், பிறகு சென்னை மாவட்டத் தலைவராகவும், அதன் பிறகு மாநில தலைவரகவும் இருந்து செயல்ப் பட்டுக்கொண்டு இருந்தார்.
சவரதொழிலாளர் சங்கம் 1990ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மருத்துவர் சவர தொழிலாளர் சங்கம் என பெயர் மாற்றம் பெற்று அரசங்கத்தில் பதிவு செய்யப்பட்டு அதன் மாநில தலைவராக அய்யா திரு.நடேசனார் அவர்கள் தலைமையில் செயல் பட ஆரம்பித்தது. இந்த காலகட்டத்தில் தான் தென்னிந்திய மருத்துவர் சங்கம் தமிழ்நாடு மருத்துவர் சமூக மத்திய சங்கம் என்ற பெயரில் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்ப்பட்டுக் கொண்டுயிருந்தது. அதன் மாநில தலைவராக அய்யா திரு.திருப்புவனம் மு.ராசு அவர்களும், மாநிலப் பொதுச்செயலாளராக சென்னியவிடுதி திரு.C.வைத்தியநாதன் அவர்களும் செயல்பட்டுக் கொண்டுயிருந்தார்கள். மருத்துவர் இனத்திற்காக பாடுபட அன்றைய காலகட்டத்தில் பல அமைப்புகள் தமிழகத்தில் செயல்பட்டு கொண்டுயிருந்த நேரத்தில் இவர்கள் அனைவரையும் ஒரே அமைப்பாக செயல்பட வைக்க வேண்டும் என முயற்சி செய்த திரு வைத்தியநாதன் அவர்கள்  அதற்கான கூட்டத்தை திருச்சி மாநகர நிர்வாகிகளாக இருந்த தலைவர் திரு.ராமு அவர்களிடமும், மாநகர செயலாளர் திரு.திருமலை அவர்களிடமும் திருச்சியிலே கூட்டம் நடைப்பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லி தனி தனியாக செயல்பட்டு கொண்டுயிருந்த அனைத்து அமைப்பு நிர்வாகிளுக்கும் அழைப்பு கொடுத்து  1992ஆம் ஆண்டு ஒற்றுமை கூட்டம் நடைபெற்றது. ஆனால் அந்த கூட்டத்தில் அனைவரும் ஒரே அமைப்பாக செயல்படுவதில் சில கருத்து பேதங்கள் ஏற்பட்ட காரணத்தினால் கூட்டமைப்பு ஏற்படுத்தி செயல் படுவது என முடிவு செய்யபட்டு தமிழ்நாடு மருத்துவர் சமூக சங்கங்களின் கூட்டமைப்பு ஆரம்பிக்கப் பட்டது. கூட்டமைப்பின் மாநில தலைவராக அய்யா திரு.M.நடேசனார் அவர்களும், கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக சென்னியவிடுதி திரு.C.வைத்தியநாதன் அவர்களும், கூட்டமைப்பின் பொருளாளராக திருப்பூர் திரு.செல்வராஜ் அவர்களும் தேர்ந்து எடுக்கப்பட்டு செயல்பட்டார்கள். இந்த கூட்டமைப்பின் தீவிர முயச்சியின் காரணமாக 1995ஆம் ஆண்டு கூட்டமைப்பின் தலைவர் அய்யா திரு.நடேசனார் தலைமையில் வரலாறு காணத கூட்டத்தை சென்னையில் கூட்டி கோட்டையை நோக்கி ஊர்வலமாக சென்று அன்றைய முதல்வர் மான்புமிகு செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கப் பட்டது.
அதற்கு பிறகு தமிழ்நாடு மருத்துவர் சவர தொழிலாளர் சங்கம் சார்பாக 1998ஆம் ஆண்டு சங்கத்தின் மாநில தலைவராக இருந்த அய்யா திரு.நடேசனார் தலைமையில் மிக பெரிய கூட்டத்தை கூட்டி அன்றைய முதல்வர் மான்புமிகு திரு.டாக்டர் கலைஞர் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு வடமாவட்டங்களிலும், தென்மாவட்டங்களிலும் அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக தனி தனியாக செயல்பட்டுக் கொண்டுயிந்த தமிழ்நாடு மருத்துவர் சவர தொழிலாளர் சங்மும், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கமும் இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டு தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் என்ற பெயரில் மாநில தலைவராக அய்யா திரு.நடேசனார் அவர்கள் தலைமையில் இன்று வரை மிக சிறப்பாக மாநிலம் முழுவதும் செயல்பட்டுக் கொண்டுயிருக்கிறது. இரு சங்கங்களும் இணைந்த பிறகு 10/10/2000ஆம் ஆண்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநில தலைவர் அய்யா திரு.நடேசனார் தலைமையில் அன்றைய மாநில அமைச்சர்கள் எல்லாம் கலந்துகொள்ள பல்லாயிரக் கணக்கான மருத்துவர் உறவுகள் எல்லாம் அணிவகுக்க வள்ளுவர் கோட்டமே நிறம்பி வழிகின்ற வகையில் முடித்திருத்துவோர் முதல் மாநில மாநாடு நடைப்பெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை சென்னியவிடுதி திரு.C.வைத்தியநாதன் அவர்களின் கனவை நினைவாக்குகின்ற வகையில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுயிருக்கின்ற நமது மாநிலதலைவர் சமுதாய காவலர் அய்யா நடேசனார் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனை மீண்டும் வேண்டிக்கொண்டு வணங்கி மகிழ்கின்றேன்.
நன்றியுடன் 
புதுக்கோட்டை
M.A.பாண்டியன் 
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம்

Comments

Popular posts from this blog

அம் -பட்டர் விளக்கம்

""சென்னியவிடுதியிலிருந்து- சென்னை மாநகர் வரை"" சென்னியவிடுதி C.வைத்தியநாதன்

வேதை க வைரப்பன்